மரம் முழுவதும்
பூக்களும் காய்களுமாய்
கனிகளும்தான்..
அங்கிங்கென்னாத படி
பறவைகளின் சத்தம்
பரவசக்கூச்சலாய்...
அடிக்கும் வெயிலையும்
அணைத்து தணலாக்கும்
அம்மரத்தின் அடிவாரம்.
அடியில் இருக்கும் வேரைக்கூட
விழுதுகள் தாங்கிப்பிடித்திருக்கும்.
காணுமிடமெங்கும் பசுமை பசுமை..
காற்று வீசும் போதெல்லாம்
கலகலவென்று சிரித்துக்கொண்டே
இருந்தன இலைகள்.
காலம் மாறியது
காற்றும் வீசியது..
இப்போதெல்லாம்
காலடியில் மிதிபட்ட
காய்ந்த இலைகள்தான்
காணக்கிடைக்கின்றன.
இலைகளின் அடியில்
வேர்களும்...
கூடாக நின்றது மரம்..
கரையக்கற்ற குஞ்சுகள்
காற்றினூடாக கலந்து சென்றன.
விழுதுகளும் கூடவேரை உறிஞ்சத்தொடங்கின.
எதிர்காலம் இனியில்லையென
மரத்திற்கு உரத்தையிட்டு
பறந்தன பறவைகள்.
வீடாக நினைத்தவை
வேறிடம் தேடின
இது இலையுதிர்காலம்
என்பதை அறியாமலே...
கூடாக இருப்பது கூடாரமாகும்
வசந்தம் வரும் என்பதை
உறுதியாய் உணர்ந்த
வேர்கள் மட்டும்
பார்வைக்களுக்கப்பால்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல முயற்சி..,
நன்றி நண்பரே.
Post a Comment