குற்றாலம் - 5
பக்கத்துலேயே ஒரு சின்ன ஹோட்டல் இருந்துச்சு. கேரளாவுல இருந்து வர்ற லாரி டிரைவர் எல்லாம் அங்கதான் சாப்பிடுவாங்களாம்.
புட்டு, ஆப்பம், தோச இருக்குன்னு சொன்னாங்க. நான் சைவம்கிறாதால தோச மாத்திரம் சொன்னேன். நிஜாமும் பிரதீப்பும் தோச மாத்திரம் போதும்னு சொன்னாங்களா...சத்தியமோகன் தோசயோட ஒரு ஆம்லேட் ஆர்டர் கொடுத்தான். அந்த சர்வர் கொஞ்சம் வயசானவரு... "ஆம்லேட் தாரா..?" என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்க இவனும் "ஆமா.. ஆமா.. ஆம்லேட் தாங்க"ன்னு சொன்னான்.
எல்லாருக்கும் கேட்டது வந்துச்சு. தோச கொஞ்சம் சுமாரா இருந்துச்சு. ஆம்லேட் நல்லா பெரிசா இருந்துச்சு. சத்தியமோகனுக்கு ஒரே சந்தோசம்.... அங்கெல்லாம் ஏமாத்துராங்க. இங்க பாரு... இதயே ரெண்டு ஆம்லேட்ன்னு சொல்லி காச தீட்டிருவாங்க... அப்டீன்னு சொல்லிகிட்டே சாப்பிட்டான்.
ரெண்டு வாய் சாப்புட்டதுக்கு அப்புறம் அவனுக்கு லேசா ஒரு சந்தேகம்.. ஏதோ வாட அடிக்குதுன்னு... சர்வர கூப்பிட்டு கேட்டான்... ஆம்லேட் டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு... அவரு கஷ்டப்பட்டு வெளங்க வச்சதுக்கப்புறந்தான் தெரிஞ்சது தாரா..ன்னா வாத்து..ன்னு!! ம்.. அப்டீயும் அவன் விடலயே... முழுசா சாப்புட்டான்.
கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ண பின்னாடி... புரோகிராம் படி தேனருவி பாக்கப் போகணுமே.. மத்த எல்லாத்தையும் வச்சுட்டு சட்ட, டவுசர், துண்டோட கெளம்பினோம். செங்கோட்ட - குத்தாலம் ரூட்ல போனோம்.. அட.. அட... அந்த வழில வரும்போது மலை எல்லாம் பாக்க பாக்க கொள்ள அழகா இருந்துச்சு...
எல்லாத்தையும் ரசிச்சுகிட்டே வந்தோம். வர்ற வழில ரோட்டுலயே இளநி வெட்டி வித்துகிட்டு இருந்தாங்க... அதயும் ஒரு கை பாத்தோம். என்னா ருசி... என்னா ருசி...!
சிற்றருவி...ல சின்னதா ஒரு குளியல் போட்டுட்டு... தேனருவிய பாக்க கெளம்புனோம். அப்ப எனக்குத் தெரியாது... இப்டியெல்லாம் நடக்க போகுதுன்னு...
Sunday, December 19, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment