Tuesday, December 21, 2004

குற்றாலம் - 7

போற வழியில எல்லாம் ரொம்ப பெரிய பெரிய பாறைங்க.... குரங்குக குடும்பம் நடத்துறதுக்கு வசதியா பாறைகளுக்கு கீழ பெரிசா இடம் இருந்துச்சு.

தேனருவிய பாக்குறதுக்கு வழுக்குப்பாறைகள்..ல எல்லாம் கவனமா சர்க்கஸ் வேல செஞ்சி போனாதாம் பாக்க முடியும்.

ரொம்ப கஷ்டப்பட்டு தேனருவிய பாக்க முடிஞ்சது.... தேனருவி.... நல்ல உயரத்துல மலை உச்சியிலிருந்து விழுந்துகிட்டு இருந்துச்சு. ஒரு ஆளு கட்டிப்பிடிச்சா எந்த அளவு இருக்குமோ அந்த அளவுல "திமுதிமு"ன்னு தண்ணி விழுந்துகிட்டு இருந்துச்சு. மத்த அருவி மாதிரி இந்த அருவில போய் தலய காட்ட முடியாது... ஆள அமுக்கிப்பூடும்ல... மேல இருந்து விழுற வேகத்துல பக்கத்துல கூட போக முடியாது... தூரத்துல இருந்துதான் குளிக்கணும்.

பக்கதுல இருந்த ஆளு சொன்னான்... என்ன இவ்ளோ தண்ணி விழுது.. எப்பயும் குழாயில வர்ற கணக்காதான தண்ணி விழும்...!..ன்னு..

அந்த ஆளு சொல்லிகிட்டிருக்கும் போதே அங்க குளிச்சிகிட்டிருந்த ஆளுங்க எல்லாம் விழுந்தடிச்சிகிட்டு மேலே ஏறி வந்துகிட்டு இருந்தாங்க. என்னன்னு விசயம் கேட்டப்ப " லெவல் கூடிகிட்டே இருக்கு...தண்ணி கலர் மாறுறது தெரியலயா..."ன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருந்தாங்க...

அப்பதான் புரிஞ்சது... முதல்ல வெள்ள வெளேர்னு விழுந்துகிட்டு இருந்த அருவித்தண்ணி இப்ப செம்பட்ட கலர்ல விழுகுது....! மேல விழுந்த மழைல தண்ணி வரத்து எக்கச்சக்கமா கூடியிருக்குன்னு..... ஹ¤ம்..தேனருவிய ஆசயோட பார்த்ததோட சரி... குளிக்கணும்கிறத எல்லாம் மறந்துட்டு கீழே போயே ஆகணும்னு ஆகிப்போச்சு...

புதுசா வந்தவங்கள தவிர எல்லாரும் வேகமா இடத்த காலி பண்ணிகிட்டு இருந்தாங்க... எங்களுக்கும் வேற வழியில்ல... அவசரமா வெளிய போறதுல ஒரு வழுக்குப்பாறைல பிரதீப் வழுக்கி விழ... லேசான செராய்ப்போட தப்பிச்சாப்புல...

வேக வேகமா கீழ வந்தா..... எங்களுக்கு முன்னாடி ஒரு "க்யூ". வரும் போது ஒரு இடத்துல ஓடய தாண்டி வந்தோம்ல.. அங்கதான்... கணுக்கால் அளவுக்கு இருந்த தண்ணி இப்ப முழங்கால் அளவுக்கு மேல ஓடிகிட்டு இருக்கு...!!

முன்னாடி நின்ன ஆளு அதுல நடந்து போக ரொம்ப பயப்பட்டாப்ல. அந்த க்ரூப்ல வந்த கொஞ்ச பேரு அந்தப்பக்கமா போயிட்டாங்க... அதுல ஒரு ஆளு அந்தப்பக்கத்துல இருந்து ஒரு நீளமான துண்ட தூக்கிப்போட்டு எங்க பக்கமா இருந்த ஆள பிடிச்சுகிட்டு வர சொன்னாரு. இவரும் துண்ட பிடிச்சிகிட்டு தண்ணியில ஒரு எட்டு எடுத்து வச்சாரு பாருங்க... அவ்வளவுதான்... தண்ணி போய்ட்ருந்த வேகத்துல அவரையும் இழுத்திருச்சு. நல்ல வேளயா அவரு துண்ட விடல... தன்ணி இழுத்த வேகத்துல ஒரு பாறைல போயி மோதுனாரு... அந்தப்பக்கமா இருந்த ஆளுங்க அடிச்சி பிடிச்சி அவர மேல தூக்கிப் போட்டாங்க...

இதுக்கு அப்புறமா அந்த இடத்துல தண்ணில கால் வைக்க யாருக்காவது தய்ரியம் வருமா...? என்ன செய்யலாம்னு அந்தப்பக்கம் இருந்தவங்களும் இந்தப்பக்கம் இருந்தவங்களும் பேசிகிட்டு இருக்கும் போதே மழை விழ ஆரம்பிச்சது...!

அந்தப்பக்கம் இருந்த ஆளுங்க... போயி ·பயர் ஸ்டேசன்ல சொல்றம்... அவங்க வந்து எப்படியாவது ஹெல்ப் பண்ணுவாங்க... அப்டீன்னாங்க...

எப்ப தண்ணி வர்றது கொறயும்..னு கேட்டதுக்கு... இப்ப வர்ற தண்ணிய பாத்தா எப்படியும் கொறய ரெண்டு நாளாவது ஆகும்..னு சொன்னாங்க..!

மழைன்னா மழை... பேய் மழை... அப்படி விழுகுது.... அந்தப்பக்கம் இருந்தவங்கள்ளாம் ஓடிப்போயிட்டாங்க...
மழைல ஏன் நிக்கணும்... ஏதாவது பாறைக்கு கீழ ஒதுங்கலாம்னா குரங்குக எல்லாம் மொறச்சு பாக்குதுக.... எங்க கூட்டம் அவங்க கூட்டத்த விட ரொம்ப இருந்ததால அவைகள வெரட்டிட்டு நாங்க ஒதுங்குனோம்.

ஒரு ஆளு பத்திரமா சுத்தி வச்சிருந்த பிளாஸ்டிக் பைல இருந்து ஒரு பீடிய எடுத்து பத்த வச்சாரு. நம்ம சத்தியமோகன் சிகரெட் விசயத்துல பெரிய கில்லாடில்ல... அண்ணே.. எனக்கும் ஒரு பீடி கொடுங்க...ன்னு அசடு வழிய கேட்டான். அவரும்... பாருங்க தம்பி.. ரெண்டு நாளக்கி சாப்பாடு கீப்பாடு கெடக்குமான்னே தெரியல.. மழை எப்ப நிக்கும்ன்னும் தெரியாது... இந்த நெலல என்கிட்ட இருக்குறது இன்னும் ஒரே ஒரு பீடி... அதயும் ஒங்கிட்ட குடுத்துட்டன்னா நான் என்ன செய்ய..ன்னு கேட்டாரு...! அப்புறம் என்ன நெனச்சாரோ... இருந்தத அவரும் கொடுக்க... சத்தியமோகன் அத வாங்கி பத்த வைக்கும் போது அவன் முகத்துல என்ன ஒரு சந்தோசம் தெரியுமா...?

ஒரு மணி நேரம் ஆச்சு... ரெண்டு மணி நேரம் ஆச்சு.. மழை நிக்கிற வழியா தெரியல.. என்ன பண்றதுன்னும் தெரியல...

டவுசர் பாக்கெட்ல வண்டிச்சாவிய தவிர வேற ஒண்ணும் இல்ல. ரெண்டு நாள எப்படி தள்றது..? சாப்பாடும் கெடயாது... குளுரு வேற அடிக்குது.... என்ன பண்றதுன்னு ஆளுக்காளு யோசன பண்ணுனோம்.. அப்பிடியே கெடக்கிற வழில நடந்து போனா கேரளாவுக்கு போயிரலாம்..ன்னு ஒரு ஆளு யோசன சொன்னாப்ல...

சரீ.. சும்மா இருக்குறதுக்கு ஏதாச்சும் முயற்சி பண்றது தப்பில்லன்னு முடிவு பண்ணுணோம். மொத்தம் பத்து பேரு இருந்ததால ரெண்டு மூணு பேரா நடக்க ஆரம்பிச்சோம். சினிமா படத்துல வர்ற மாதிரி கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா "ஹோய்... ஹோய்"ன்னு சத்தம் கொடுத்துகிட்டே போனோம். எதுத்தாப்ல என்ன வரும்னு தெரியாத நெலம... செருப்பும் கெடயாது... வழி நெடுக "சொத சொத"ன்னு சகதி மாதிரி இருக்கு... ரெண்டு பக்கமும் இடவெளியே இல்லாம செடியும் புல்லுமா வளந்து கெடக்கு... எந்த தெசைல போறோம்னும் தெரியல...

மரம் வெட்டிட்டு போறவங்க அடிக்கடி போற பாத போல... நிக்காம மழைல நடந்துகிட்டே இருந்தோம்.
ஒன்னு ஒன்னர மணி நேரம் நடந்திருப்போம்.... கிட்டத்தட்ட ஒரு சமதளத்துக்கு வந்து சேந்துட்டோம்.. வழில ஒரு போர்டு தமிழ்ல... அரசு தாவர ஆராய்ச்சிப்பண்ணையோ ... அரசு மூலிகை ஆராய்ச்சிப்பண்ணையோ..ன்னு எழுதியிருந்துச்சு... அப்பாடா ... கொஞ்சம் நிம்மதி மனசுல... பெரு மூச்சு விட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சோம். அந்த வழி சிற்றருவிக்கு பக்கத்துல ஒரு இடத்துக்கு வந்து சேந்துச்சு. மழையும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிருச்சு.

கீழ வந்து வண்டி எல்லாம் இருக்கான்னு பாத்தோம்.. நல்ல வேள அங்ஙனயே இருந்துச்சு.
மணி நாலரைகிட்ட இருக்கும்...மதியம் சாப்பிடலல்ல.... இப்பத்தான் வயித்துக்கு தெரிஞ்சது போல... தள்ளுவண்டில சுடச்சுட பஜ்ஜி போட்டுகிட்டு இருந்தாங்க... நாக்குல எச்சி ஊறிச்சு. மொளகா பஜ்ஜி, உருளக்கெழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜின்னு எல்லா வக பஜ்ஜியையும் ஒரு கை பாத்தோம். சூடா காப்பித்தண்ணியும் உள்ளத் தள்ளுனப்புறம்தான் ஒரு தெம்பே வந்துச்சு.

கத இதோட முடிஞ்சதுன்னு நெனச்சீங்களா... விட்ருவனா....?

No comments: