செல்வதாஸ் - மனிதநேயம்
விழி இதழுக்காக தலையங்கம் போல செல்வதாஸ் அண்ணாச்சி எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு:
மனிதகுலம் வரலாற்றின் வழி நெடுகிலும் எதிர்கொண்டு அனுபவித்த இன்னல்கலையெல்லாம் களைந்து மேம்பாடடைவதற்கும், அதனுடைய வளர்ச்சிப்படிகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கும், மனிதகுலம் நினைவில் நிறுத்தியுள்ள மாமனிதர்களோடு அவர்களது முயற்சியிலும் உழைப்பிலும் தங்கலது சொந்த வியர்வையையும் இரத்தத்தையும் ஒன்றிணைத்துக்கொண்ட 'முகம் தெரியாத' 'மனிதர்கள்' நூறாயிரக்கணக்கிலே. இவர்களையெல்லாம் 'மனிதகுல நல்வாழ்வுக்காக' வியர்வையும் இரத்தமும் சிந்தி உழைக்க வைத்தது எது?
நிச்சயமாக ....அது -
பாடுகளில் சிக்கி உழன்று, தவிக்கின்ற மனிதனை நேசிக்கின்ற - மனிதம் ஆட்சி செய்யும் மனிதகுல வாழ்க்கையைப் படைக்கத் துடிக்கின்ற ' மனிதர்களின் அன்பு' மனித நேயம் அல்லவா..!
இந்த மனித நேயம் என்பது -
- எந்த வகையான எல்லைகளுக்கும் அல்லது வரையறைகளுக்குள்ளும் தன்னை முடக்கிக்கொள்வதில்லை.
- அடக்கி ஆளும் ஆதிக்க வெறியின் அச்சுறுத்தல்களுக்கு அடங்கிப்போவதுமில்லை.
- இதன் இயல்பான பிரசவத்தை நிர்ப்பந்தங்கள் கருச்சிதைவு செய்யப் பொறுத்துக் கொண்டிருப்பதுமில்லை.... அப்போது
- பொங்கிச்சீறியெழுந்து போர் தொடுக்கும் போர்க்குணமிக்கது.
எனினும் -
இந்த மனித நேயம் பட்சமானது அல்லது சார்புடையது.
- உண்மையைச் சார்ந்து நிற்கும் - பொய்மையின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போரிடும்.
- மனித வாழ்க்கையை, அதன் மேம்பாட்டை; மனித குல முன்னேற்றத்தை மறுக்கின்ற அல்லது தடுக்கின்ற எந்தச் சக்தியையும் முறியடிக்க அணி திரளும்.
இந்த மனித நேயப் போர்ப்படையணிகளின் வரிசையில் நமது விழியும் அதன் இயக்கமும் ஒன்றிணையட்டும்.
இது உண்மையின் வெற்றியைக்கோரி தொடுக்கின்ற போர்!இது மனிதகுல உயர்வு வேண்டி தருகின்ற உழைப்பு!
நீங்களும் பங்களிப்பீர்..! நாம் நமது முயற்சிகளையும் உழைப்பையும் ஒன்றிணைத்துக்கொள்வோம்!!
"இனி மனிதகுல உயர்வுக்கும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளவைகளே நம் இலக்கு. அவைகளின் நிர்மூலமே நாம் வேண்டுவது."
- ஆசிரியர் குழு.
Wednesday, February 02, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment